தமிழகத்தில் ரூ.35,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (CICR) தற்போது Young Professional, JRF, SRF பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Central Institute for Cotton Research (CICR) |
பணியின் பெயர் | Young Professional, JRF, SRF |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.04.2022 to 22.04.22022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CICR காலிப்பணியிடங்கள்:
Young Professional பணிக்கு 08 காலிப்பணியிடங்கள்.
- SRF பணிக்கு 01 காலிப்பணியிடம்.
- JRF பணிக்கு 01 காலிப்பணியிடம்.
CICR தகுதி விவரங்கள்:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc / M.Sc டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இப்பணிக்கு Ph.D பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பில் பார்க்கவும்.
CICR வயது விவரம்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பானது 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை அளிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
CICR ஊதிய தொகை:
Young Professional பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
SRF மற்றும் JRF பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.35,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
CICR தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள். மேலும் நேர்காணல் ஆனது 20.04.2022 முதல் 22.04.2022 ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் குறித்த விரிவான தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
CICR விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படித்துவத்தை பெற்று பூர்த்தி செய்து, நேர்காணலின் போது கொண்டு சென்று தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இதன் பின் தகுதியானவர்கள் மட்டும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையலாம்.