CIBA நிறுவனத்தில் Degree முடித்தவர்களுக்கு வேலை – ஜூன் 30 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் (CIBA) ஏற்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் காலியாக உள்ள Young Professional-I பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளைக்குள் (30.06.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
CIBA வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Young Professional-I பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனத்தில் (CIBA) காலியாக உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Computer Science / Information Technology / Computer Application போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BE / B.Tech அல்லது MCA / M.Sc டிகிரி பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PHP மற்றும் MYSQL தெரிந்தவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆண்களாக இருந்தால் 35 வயதிற்குள் உள்ளவராகவும், பெண்களாக இருந்தால் 40 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியமானது ஆகும். மேலும் இப்பணிக்கு அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- மேலும் இப்பணிக்கான நேர்முகத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்கள் Shortlist செய்யப்படும் நபர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CIBA விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (30.06.2022) என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.