விரைவில் தமிழகத்திலும் சிப்பெட் கல்வி மையம் – அமைச்சர் அறிவிப்பு!

0
விரைவில் தமிழகத்திலும் சிப்பெட் கல்வி மையம் - அமைச்சர் அறிவிப்பு!
விரைவில் தமிழகத்திலும் சிப்பெட் கல்வி மையம் - அமைச்சர் அறிவிப்பு!
விரைவில் தமிழகத்திலும் சிப்பெட் கல்வி மையம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59.19 கோடி ரூபாய் செலவில் தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சிப்பெட்:

சென்னை கிண்டி தொழிற்பேட்டையில், ‘சிப்பெட்’ என்ற மத்திய பிளாஸ்டிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், 1968ல் தொடங்கப்பட்டது. பிளாஸ்டிக்ஸ் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமா படிப்புகள் இங்கு கற்று தரப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிப்பெட் தலைசிறந்த சேவையைச் செய்து வருகிறது. இன்று சர்வதேச அளவில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் சிப்பெட்டில் பயின்ற மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சிப்பெட் நிறுவனத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக மாற்ற அரசு போராடி வருகிறது. இந்நிலையில், கிண்டியில் உள்ள சிப்பெட் வளாகத்தில், 59.19 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு அடுக்கு உடைய தொழில்நுட்ப மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் தமிழகத்தில் துாத்துக்குடி மாவட்டத்தில் புதிய மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கர்நாடகா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் சிப்பெட்’ கல்வி மையம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பிளாஸ்டிக் துறை வளர்ச்சியில், சிப்பெட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழகம் வாகன உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. அத்துறைக்கு தேவையான பிளாஸ்டிக் சார்ந்த உதிரி பாகங்கள், மருத்துவத் துறைக்கு தேவையான பிளாஸ்டிக் கருவிகள், வேளாண் துறைக்கு தேவையான பொருட்கள் அனைத்திற்கும், சிப்பெட்டின் பங்களிப்பு இன்றியமையாதது.

ஜூலை 9ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, பெட்ரொ கெமிக்கல் துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இத்துறையின் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. இந்த தொழில்நுட்ப மையத்தால் திறன் பெற்ற தொழிலாளர்கள், இத்துறையில் அதிகம் கிடைப்பர். இதனால், அதிக வேலை வாய்ப்பும் உருவாகும். 100 ஏக்கரில் தரம் உயர்த்தி தர வேண்டும் என்று ஒன்றிய அரசை கேட்டுக் கொண்டார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!