குதிரையுடன் எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் – உத்தரகண்டில் பதற்றம்!

0
குதிரையுடன் எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் - உத்தரகண்டில் பதற்றம்!
குதிரையுடன் எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் - உத்தரகண்டில் பதற்றம்!
குதிரையுடன் எல்லைக்குள் நுழைந்த சீன வீரர்கள் – உத்தரகண்டில் பதற்றம்!

இந்தியாவில் சீன ராணுவத்தை சேர்ந்த 100 வீரர்கள் 50 குதிரைகளோடு உத்தரகாண்ட் மாநில எல்லை வழியாக பல்வேறு கட்டமைப்புகளை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளதால் எல்லையில் பதற்றம் நிலவியுள்ளது.

உத்ரகாண்ட் எல்லையில் சீன வீரர்கள்:

இந்தியா மற்றும் சீனா இடையே பல வருடங்களாக எல்லை தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. இதில் 3,440 கி.மீ., தூரமுள்ள எல்லையில் யாருக்கு எந்த இடம் சொந்தம் என்பது வரையறுக்கப்படாமல் இருவருக்கும் பொதுவான நிலையில் அது அசல் கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படுகிறது. நதிகள், ஏரிகள், பனிமலைகள், போன்ற பகுதிகளில் இருவருக்கும் தனித்தனியாக தங்களுக்குள் ஒதுக்கப்பட்ட பகுதிகளை கடந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டால் அப்போது எல்லைமீறல் அடிப்படையில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தொடரும்.

பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை – எளிய வழிமுறைகள் இதோ!

இவ்வாறு இருக்கையில் சுமார் 45 ஆண்டுகளாக அமைதி நிலவி வந்த இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இருதரப்பு ராணுவ வீரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சீன வீரர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியானது. இதனால் லடாக் பகுதியில் பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்திய பிறகு லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் குறைந்து அமைதி நிலவியதாக தகவல் வெளியானது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் கவனத்திற்கு – மாநகராட்சி ஆணையர் உத்தரவு!

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி 50 குதிரைகளோடும், 100 வீரர்களோடும் எல்லை பகுதியான பாராஹோட்டி வழியாக சுமார் 5 கிமீ தூரம் இந்திய பகுதிக்குள் நுழைந்து உத்ரகாண்ட் மாநில எல்லை பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை சேதப்படுத்தி விட்டு சென்றது சீன ராணுவம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது சீனாவின் பார்வை உத்தரகாண்ட் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் உத்தரகாண்ட் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!