மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி! அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஹாங்காங் நிர்வாகம் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
முழு ஊரடங்கு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ் தொற்று மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் கோரத்தாண்டவம் ஆடியது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியது. அதனால் உலக நாடுகள் கொரோனாவால் கடும் சவாலை சந்தித்தது. இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்து டெல்டா, ஓமிக்ரான் BA 2 என புதிய வைரஸ் அதிக வீரியத்துடன் பரவ தொடங்கியது.
தமிழகத்தில் நாளை (மார்ச் 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதனால் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பும் தொடர்ந்து உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாட்டு அரசுகள் உலக சுகாதாரத்துறையின் உத்தரவிற்கிணங்க ஊரடங்கு மற்றும் கட்டுபாடுகளை விதித்தது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசிகளை கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு 2 டோஸ் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் மக்களுக்கும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர் இந்த நேரத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52, 523 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறுகிறது. மேலும் சிகிச்சை பலனின்றி 188 பேர் உயிரிழந்து உள்ளனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது . இதனால் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதிகரிக்கும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஹாங்காங் நிர்வாகம் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
TNPSC Coaching Center Join Now