குழந்தைகளுக்கான ஆதார் கார்டு – புதுப்பிக்க வேண்டியது அவசியம்.. UIDAI வெளியிட்ட முக்கிய தகவல்!
இந்தியாவில் ஆதார் கார்டு பெற வயது வரம்பு இல்லை. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் கார்டு பெறலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் ஆதார் கார்டு பெறும் போது அவர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கப்படுவதில்லை. இது குறித்து ஆதார் அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆதார்:
இந்தியாவில் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமக்களின் அடையாளமாக உள்ளது. இந்த ஆதார், வங்கி பண பரிவர்த்தனைகள், கேஸ் இணைப்பு பெற, ஓட்டுநர் உரிமம் பெற மற்றும் அரசின் நலத்திட்டங்களை பெறவும் அவசியமாகிறது. இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால் ஆதார் எனப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இது நீல நிறத்தில் இருக்கும். இந்த ஆதார் கார்டை பெற குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆதார் கார்டு அவசியமாகும். https://appointments.uidai.gov.in/easearch.aspx என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று பால் ஆதாருக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆதாரில் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படுவதில்லை.
போக்குவரத்து காவலர்களுக்கு ஓர் நற்செய்தி – காவல் ஆணையர் முக்கிய அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதில் ஆதார் எண் தொடர்பான விவரங்கள் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அதனால் 5 வயதிற்கு பிறகு பால் ஆதார் செல்லாது. எனவே குழந்தைக்கு 5 வயது அல்லது 15 வயது ஆகும் போது விரல்கள், கருவிழி மற்றும் புகைப்படம் உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்களை ஆதாரில் சேர்த்து ஆதாரை அப்டேட் செய்ய வேண்டும். அப்டேட் செய்யப்பட்ட பிறகு ஆதார் எண்ணில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று ஆதார் அமைச்சகம் தெரிவித்துள்ளது.