தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஆய்வறிக்கை வெளியீடு!!
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா ஊரடங்கினால் குழந்தை திருமணங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கிறது.
ஆய்வு அறிக்கை:
கொரோனா தொற்று கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டை உலுக்கி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் நிலவி வருகிறது. இது போன்ற சூழ்நிலையில், நமது அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கர்நாடகா போன்றவற்றில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்திலும் இது போன்ற புகார்கள் குவிந்த நிலையில், தமிழக தன்னார்வ குழந்தைகள் உரிமை நிறுவனமான சி.ஆர்.ஒய் (CRY), இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஆய்வின் முடிவை செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில், 2020ம் ஆண்டு மே மாதத்தில் 40% குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
தமிழக அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் – அரசாணை வெளியீடு!!
அதவாது அந்த மாதத்தில் மட்டும் 318 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. சேலம், தருமபுரி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 72 கிராமங்களில் இந்த புகார் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மே மாதத்தில் முகூர்த்த நாட்கள் அதிகமாக உள்ளதால் குறிப்பாக இந்த மாதத்தில் அதிகமான குழந்தைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.