இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ‘சைடஸ் கேடில்லா’ தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!

0
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 'சைடஸ் கேடில்லா' தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 'சைடஸ் கேடில்லா' தடுப்பூசி - மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ‘சைடஸ் கேடில்லா’ தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி!

இதுவரை கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே செலுத்தி வந்த நிலையில் தற்போது 5 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுவர்களுக்கும் செலுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசும் பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் பல லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி பலியாயினர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் எனவும், அப்படி வெளியே வரவே வரும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனத்திற்கு – முக கவசம் கட்டாயம்!

இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவும் தடுப்பூசி இரண்டு தவணையாக மக்களுக்கு செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் தற்போது வரை முதல் தடுப்பூசியை 91.9 சதவீத மக்கள் செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டாவது தவணை தடுப்பூசியை 74.75 சதவீத மக்கள் செலுத்தியுள்ளனர். ஏராளமான மக்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திய காரணத்தினால் தான் கொரோனா குறைய ஆரம்பித்தது. தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனால் மீண்டும் கண்டிப்பாக மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கண்டிப்பாக செலுத்திகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 5 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியும் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சைடஸ் கேடில்லா என்கிற தடுப்பூசியும் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தான் இந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தினால் அவசர காலத்திற்கு மட்டுமே பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!