தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு? தலைமை செயலாளர் தீவிர ஆலோசனை!!
கொரோனா பரவல்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. டிசம்பர் மாதம் முதல் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு – உயர்நீதிமன்றம் அனுமதி!!!
பள்ளிகள் விடுமுறை:
பள்ளி, கல்லூரிகளின் வாயிலாக அதிவேகத்தில் தொற்று பரவுவதால் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் சமீபத்தில் விடுமுறை அளிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களாக தமிழகத்தில் ஒரே நாளில் 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது.
ஆலோசனை கூட்டம்:
கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வல்லுநர் ஆலோசனை குழுவுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் போன்றவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். அதில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் காரணங்கள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.
ஆலோசனையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் நடக்க இருப்பதால் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Only online canvash voters of election candidate
No corona
No fear
No 144
People are commercial development
Only thousands people croud