தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமை செயலர் உத்தரவு!
தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்கள் உத்தரவிட்டுள்ளார். தற்போது அதற்கான முழு விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக வருகிற 21ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களது தலைமையிலான அரசு பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தொடர்ந்து பணியிட மாற்றம் செய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலுக்கு ஏற்ப பணியிட மாற்றம் செய்யப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து சேவை துவக்கம்? துறை அதிகாரிகள் தகவல்!
தற்போது தமிழக தலைமை செயலர் இறையன்பு அவர்கள் தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த சீதாலட்சுமி அவர்கள் கல்வி மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையராகவும், காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் அவர்கள் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்று முதல் குருவாயூர், கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
சிறப்பு செயலாக்க துறையின் முதன்மை செயலாளராக விபு நாயர் அவர்கள், சமூக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளராக மங்கத் ராம் சர்மா அவர்கள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கமல்கிஷோர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜ் அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சந்திரகலா அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு வாரத்தில் தமிழ் நாட்டையே மாத்திட்டீங்க.