தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் – தலைமை செயலர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் முழுமையான விவரங்களை மருத்துவமனைகள் தர வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
கொரோனா உயிரிழப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. மே மாத ஆரம்பத்தில் கொரோனா பாதிப்புகள் தமிழகத்தில் உச்சம் அடைந்தது. இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 24.1 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22.9 லட்சம் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்கள் பட்டியல் – சென்னை 2ம் இடம்!
கொரோனா பாதிப்புகளினால் இதுவரை தமிழகத்தில் 30,835 பேர் உயிரிழந்துள்ளனர். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் விவரங்களை தினசரி அரசுக்கு அறிக்கையாக மருத்துவமனைகள் வழங்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே சுகாதாரத்துறை மாநிலத்தின் தினசரி கொரோனா பாதிப்புகளை அறிந்து கொள்ள முடியும்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார். அதன்படி, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெயர், முகவரி, வயது போன்ற அனைத்து முழுமையான விவரங்களையும் அரசுக்கு சரியாக தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறித்த உண்மை நிலவரத்தை அறிய முடியும்.