தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 753 காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது – காவல் ஆணையர் வழங்கல்!
தமிழகத்தில் காவல்துறையில் பணியாற்றி 10 ஆண்டுகளுக்கு மேல் எந்தவித தண்டனையும் பெறாமல் இருக்கும் காவலர்களுக்கு முதலமைச்சர் காவல் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இவ்விருது தற்போது காவல் ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் காவல் விருது
தமிழகத்தில் காவல் துறையினர் பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணித்து வருகின்றனர். அதனால் காவல்துறையினருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் காவலர்களை பெருமிதப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
Post Office கணக்கு வைத்துள்ளீர்களா? உங்க பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? அறிந்து கொள்ள வழிகள் இதோ!
இதில் குறிப்பாக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் எந்தவித தண்டனையும் பெறாமல் பணிபுரியும் காவலர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதலமைச்சர் காவல் விருது தற்போது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இந்த விருதானது, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடந்த விழாவில் 753 காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது காவலர்களை பெருமைப்படுத்துவதுடன், அவர்கள் மேலும் சிறப்பாக பணியாற்ற உந்துதலாக விளங்கும்.
Exams Daily Mobile App Download