தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளில் ஏற்படும் சிக்கல் – முதல்வர் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் நிலைமை மோசமாகிவிடும் எனவே மக்கள் தங்களை கொரோனா பரவலில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் வரை தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு செய்து, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ மூலம் மாநில மக்களிடம் பேசினார்.
TN Job “FB Group” Join Now
அதில் கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து தான் மற்றவரிடம் பரவுகிறது. இதனால் அரசின் நடவடிக்கைகள் ஒரு புறம் இருந்தாலும், மக்கள் தங்களை வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். மே 24 ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்திய ஊரடங்கு பலனை தந்துள்ளது. ஆனால் இதே போல மேலும் ஊரடங்கை நீட்டிக்க முடியாது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் – மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!!
அதற்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஊரடங்கை ஒரேயடியாக தளர்த்தினால் நிலைமை சிக்கலாகி விடும். மேலும் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே படிப்படியாக ஊரடங்கை தளர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனை மாநில அரசும் நன்கு உணர்ந்திருக்கும். குறைந்தபட்சம் ஜூலை இறுதி வரை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்பதே பரவலான கருத்தாக இருக்கிறது. அதற்குள் தடுப்பூசி போடும் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.