சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை முதல் மதுரை நூலகம் வரை – முதல்வரின் அறிவிப்புகள்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முக்கிய 6 சிறப்பு திட்டங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். தற்போது அதற்குரிய முழு விவரம் வெளியாகியுள்ளது.
முதல்வரின் அறிவிப்புகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நோய்பரவால் காலத்தில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கொரோனா நிவாரணத் தொகை ரூ.4000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என்று ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இன்று தமிழகத்தின் முன்னாள் மறைந்த முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் பிறந்தநாள். இந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வரான ஸ்டாலின் அவர்கள் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி முக்கிய 6 திட்டங்கள் குறித்து தற்போது தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மக்களுக்கு பயன்படும் வகையில் இருப்பதோடு மக்கள் அனைவராலும் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை – முதல்வர் அறிவிப்பு!
6 புதிய திட்டங்கள்:
- தென் சென்னையில் ரூ.250 கோடி மதிப்பில் அதிநவீன பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும். சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.250 கோடி செலவில் 500 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை அமைக்கப்படும்.
- திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்.
- எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘இலக்கிய மாமணி விருது’, பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணம் வழங்கப்படும்.
இன்று உலக சைக்கிள் தினம் – சைக்கிள் ஓட்டுவதன் நன்மைகள் இதோ!!
- மதுரையில் சுமார் ரூ.70 கோடி மதிப்பில் கருணாநிதி நினைவு நூலகம் அமைக்கப்படும். அதன்படி சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் அமைக்கப்படும்.
- திருவாரூர் மாவட்டத்தில் ரூ.30 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர் களங்கள் அமைக்கப்படும்.
- தமிழநாட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான விருதுகள், மாநில அளவிலான விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பாக இலவச வீடு வழங்கப்படும்.