நீலகிரி மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் – இரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பு!
ஊட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. இந்த மலர் கண்காட்சியை திறந்து வைக்க முதல்வர் செல்லவுள்ளார். மேலும், நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பான நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள இருக்கிறார்.
சுற்றுப்பயணம்:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக மலர் கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா பரவல் குறைந்த காரணத்தினால் இந்தாண்டு மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது. அதாவது மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடைபெற இருக்கிறது.
Exams Daily Mobile App Download
மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே பல வகையான மலர் செடிகள் நடும் பணி தொடங்கப்பட்டது. 275 வகைகளில் 5.5 லட்சம் மலர் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையை அலங்கரிப்பதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஊட்டியில் அவ்வப்போது மழை பொழிந்த காரணத்தாலும் மலர் செடிகள் நன்றாக வளர்ந்து பூத்து குலுங்கி கொண்டிருக்கிறது.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி – மே 12ம் தேதிக்குள் மேல் முறையீடு!
இந்த ஊட்டி மலர் கண்காட்சியை வரும் மே 20 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைக்க இருக்கிறார். கண்காட்சியை திறந்து வைக்கும் நிகழ்வுக்காக மே 19ம் தேதி சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டி செல்கிறார். இதுமட்டுமல்லாமல் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான நிகழ்வுகளும் தயாராகி வருகிறது. இதனால் மே 20, மே 21 ஆகிய இரு தினங்களும் நீலகிரி மாவட்டத்தில் தங்கி இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க இருக்கிறார். முதல்வர் கண்காட்சியில் கலந்துகொள்ள இருப்பதால் பூங்காவின் பழமையான கட்டிடங்கள் அனைத்தும் வர்ணம் தீட்டப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.