திருச்சி, தஞ்சையில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் – முதல்வர் இன்று ஆய்வு!!
தமிழகத்தில் திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை இன்று காலை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். நாளை மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
முதல்வர் ஆய்வு:
விவசாயத்திற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது. கடந்த 16 வருடங்களாக குறிப்பிட்ட நாளான ஜூன் 12ம் தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பகுதிகளுக்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த வருடமும் ஜூன் 12ம் தேதியான நாளை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. நாளை காலை மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். இதனை தொடர்ந்து திருச்சி, தஞ்சையில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட உள்ளார்.
பேருந்துகள் இயங்க அனுமதி, ஜூன் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில், 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி செல்கிறார். அங்கு கல்லணை கால்வாய் பகுதிக்குச் சென்று, தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் தஞ்சை மாவட்டத்தில் முதலை முத்துவாரி கொடிங்கால் வாய்க்கால் மற்றும் வெண்ணாற்றில் நடைபெறும் பணிகளையும் பார்வையிடுகிறார்.
TN Job “FB Group” Join Now
அங்கு புலிவலம் மணல் போக்கிலிருந்து 280 மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதை முதல்வர் முதல்வர் பார்வையிடுகிறார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாலையில் திருச்சியில் இருந்து சேலம் செல்லும் முதலமைச்சர், அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.