தமிழகத்தில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படுமா – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அது தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை அதிக அளவில் பரவியதன் விளைவாக முதலில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அப்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் இந்த தளர்வுகளை அதிகமாக பயன்படுத்தியதன் விளைவால் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மே 24ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வந்தது.
சிங்கங்களை தவிர மற்ற விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை – வனத்துறை அமைச்சர்!!
இதன்பின்னர் பாதிப்புகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும் மருத்துவ வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து ஜூன் 14 ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீடித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு ஜூன் 21ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. பாதிப்புகள் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் சலூன் கடைகள், தேநீர் கடைகள் போன்றவை திறக்க அனுமதியுடன் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை காலை 11 மணி அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவது குறித்தும் முதல்வர் ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.