மாநிலத்தில் 12,000 புதிய வேலைவாய்ப்புகள் – முதல்வர் வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!
கர்நாடகா மாநிலம் மைசூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் தொடங்க பல நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதிகளில் புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு:
இந்தியாவில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு என்பது மக்களுக்கு பெரும் சவாலாக மாறி விட்டது. பல முன்னணி நிறுவனங்கள் கொரோனா மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார சரிவை காரணம் காட்டி புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்த்து வந்தது. இந்த நிலையில் மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர முன் வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் 2022-ம் ஆண்டு அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு 2 வருடங்களுக்கு பிறகு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் ஏராளமானோர் பணி நியமனம் பெற்றனர். அரசு துறை மட்டுமல்லாது தனியார் துறைகளிலும் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் 12,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
நாளை (29.10.2022) ஐந்தாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை? முழு விவரம் உள்ளே!!
Follow our Instagram for more Latest Updates
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், மைசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதலீடு செய்து தொழில் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் அதனால் மைசூரில் புதிதாக 12,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அதனை தொடர்ந்து 1.174 லட்சம் கோடி மதிப்பில் தயார் செய்யப்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டங்களின் மூலம் மாநிலத்தில் இன்னும் சில ஆண்டுகளிலேயே புதிதாக வேலைவாய்ப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.