ஜூன் 12 இல் திருவாரூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின் – மேட்டூர் அணை திறப்பு!
தமிழகத்தில் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. திருவாரூரில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் கலந்து கொள்ள உள்ளார். அதன் பிறகு அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.
மேட்டூர் ஆணை திறப்பு:
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் எனும் ஊரில் உள்ளது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேலும் உலகிலேயே மிகப்பெரிய ஏரியாக விளங்கியது. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தமிழகத்தில் டெல்டா பகுதிகளுக்கு பயன்படுகிறது. வருடம் தோறும் விவசாயத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கடந்த 16 ஆண்டுகளாக ஜூன் 12ம் தேதி அன்று மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த முறையும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளது. மேட்டூர் அணையின் நீர் வரத்து சுமார் 60 ஆண்டுகளாக குறைவாக உள்ளது. மேலும் நீர் இருப்பும் பெரிதாக இல்லை. இதனால் பாசனத்திற்கான தண்ணீர் அணையிலிருந்து தாமதமாக திறக்கப்பட்டு வந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 10 ஆண்டுகளாக முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த வருடம் 2021 ஜூன் 12 ம் தேதி அன்று மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக முதல்வர் திருவாரூர் செல்ல உள்ளார். மேட்டூர் அணை வரலாற்றில் இதுவரை 17 ஆண்டாக குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. நிகழ்ச்சி முடிந்தவுடன் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் திட்டமிட்டுள்ளார்.