பெண் மற்றும் பெண் போலீசாருக்கு எதிராக செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை – தமிழக முதல்வர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் கட்சிகாரர்கள் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பெண் காவலருக்கு எதிராக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
பெண் காவலர்:
தமிழகத்தில் விரும்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலாளியிடம் அரசியல் கட்சிகாரர்கள் இருவர் தவறாக நடந்து கொண்டனர். இதையடுத்து பெண் காவலாளியிடம் தவறாக நடந்து கொண்டவர்களின் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு தவறு நடைபெற்றது உறுதியானதும், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
பட்ஜெட்டுக்கு பிறகு இந்த பொருட்களின் விலை தாறுமாறாக உயர்வு – முழு விவரம் உள்ளே!!
இச்சம்பவம் நடந்ததை தொடர்ந்து, உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கூறியதாவது, விரும்பாக்கம் சம்பவத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்த அன்றே எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்பின்பு, 72 மணி நேரத்தில் பிரவின்குமார், ஏகாம்பரம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் காலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். மேலும் முதல்வர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பெண் மற்றும் பெண் காவலருக்கு இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.