தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 28% ஆக உயர்வு – முதல்வர் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் 28% வரை அகவிலைப்படி (DA) உயர்வு அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
கடந்த சில நாட்களாக அகவிலைப்படி (DA) உயர்வுக்காக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவதாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 28% ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு மூலம் ரேஷன் கடை விநியோகஸ்தர்கள் மற்றும் கட்டுநர்களுக்கான அகவிலைப்படி தொகை தற்போது 14 சதவீதத்தில் இருந்து 28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7ம் தேதியன்று அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரேஷன் கடை பயனர்களுக்கு உணவுப்பொருட்களை தடையில்லாமல் வழங்குவதற்கு மாற்று ஊழியர்கள் ஏற்படுத்தப்பட்டனர். இதற்கிடையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்துவது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாகவும், இது குறித்த முடிவு இன்னும் ஒரு சில நாளைக்குள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28 ஆக அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பால் சுமார் 19,658 ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள் என மொத்தம் 22,510 ஊழியர்கள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆண்டு தோறும் அரசுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.