கல்வி கட்டணம் ரத்து – முதல்வர் அதிரடி உத்தரவு !
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு முறைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்பட்ட மக்கள் தங்களது வாழ்வில் சொல்லமுடியாத இன்னல்களுக்கு ஆளாகிவருகின்றனர். மக்களை பல்வேறு இன்னல்களில் இருந்து காக்க அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக புதுச்சேரி அரசு ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை ரத்து செய்து ஆணை பிறப்பித்து உள்ளது.
கல்வி கட்டணம் ரத்து:
புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் கல்லுரி கட்டணம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அனைத்து கல்வி கட்டணத்தையும் ரத்து செய்வதுடன் கல்லுரியில் சேர இலவசமாக விண்ணப்பம் வழங்கப்படும். மேலும் 4 கோடி செலவில் புதிய கல்வி தொலைக்காட்சி மற்றும் வானொலி தொடங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.