தமிழகத்தில் மளிகைப் பொருட்கள் உட்பட 5 புதிய திட்டங்கள் – முதல்வர் துவக்கி வைப்பு!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, சென்னை தலைமை செயலகத்தில் 5 புதிய திட்டங்களை, முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.
புதிய திட்டங்கள்:
திமுக தலைமையில் ஆட்சியமைத்துள்ள புதிய அரசானது, பொது மக்கள் சந்தித்து வரும் இந்த இக்கட்டான காலத்தில் பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட அடுத்த நாளிலேயே, பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லை, 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி என பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் இன்று பொது மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்துள்ளர். அந்த வகையில் தலைமை செயலகத்தில் இன்று (மே 3) காலை 10:30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 14 வகையான மளிகை பொருட்களை விநியோகித்து, இத்திட்டத்தை துவக்கி வைத்துள்ளார்.
மனிதர்களின் வாழ்நாளை 150 ஆண்டுகளாக நீட்டிக்கலாம் – ஆய்வு அறிக்கை வெளியீடு!!
தொடர்ந்து 12,959 கோவில்களில் பணியாற்றும் மாத ஊதியம் பெறாத அர்ச்சகர்கள், பணியாளர்கள் உட்பட 14 ஆயிரம் பேருக்கு 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்குதல், கொரோனா முன்கள பணியின் போது மரணமடைந்த பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குதல் போன்ற நலத்திட்ட உதவிகளை முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.