தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொற்றுக்கு மத்தியில் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூலை 1) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

முழு ஊரடங்கு

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கியது. இந்த நோய்த்தொற்றின் நிமித்தம் உலகளவில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதே போல இந்தியாவிலும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத்துவங்கிய கொரோனா பெருந்தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட நோய்த்தடுப்பு நடவடிக்கையாக நாடு தழுவிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு அலைகளின் போதும் இது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கடைசியாக உருவான கொரோனா 3ம் அலையின் போது இந்த ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் மாநில அரசுகளால் விதிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மார்ச் முதல் வாரத்தில் இருந்து தளர்த்தப்பட்டது. அதன் பிறகு மக்கள் மீண்டுமாக தங்களது இயல்பு வாழ்க்கையை துவங்கினார்கள். இதற்கிடையில் எதிர்பாராதவிதமாக கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் கணிசமாக உயரத்துவங்கி இருக்கிறது.

அந்த வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சீபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் தினசரி ஒட்டுமொத்த பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்திருக்கிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் சென்னையில் 909, செங்கல்பட்டு 352, காஞ்சிபுரம் 71, திருவள்ளூர் 100 என தமிழகம் முழுவதும் 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது மக்கள் மீண்டும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கதிருக்கு நகையை கொடுத்த முல்லை, நகைகளை அடமானம் வைத்து கடன் அடைக்க திட்டமிடும் தனம் – இன்றைய எபிசோட்!

அதே போல ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இலவச தடுப்பூசி முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் இன்று (ஜூலை 1) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலர் கலந்து கொள்ள இருப்பதாகவும், நோய்த்தடுப்பு தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!