ஜூன் 21க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் – மாநில முதல்வர் இன்று மாலை அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து கொண்டே வருவதால் கூடுதல் தளர்வுகள் குறித்து இன்று மருத்துவ வல்லுனர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னர் இன்று மாலை தளர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளர்வுகள் அறிவிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஜூன் 14 முதல் இரவு ஊரடங்கு, வார இறுதிநாள் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 21 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழில் மதிப்பெண்கள் – அரசுக்கு கோரிக்கை!
பெங்களூர் உட்பட பல மாவட்டங்களில் இந்த தளர்வுகள் அமலில் உள்ளது. மைசூர், சாம்ராஜ்நகர் உட்பட சில மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் ஜூன் 21 ஆம் தேதிக்கு பின்னர் சில கூடுதல் தளர்வுகள் அமல்படுத்தலாம் என மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா, மாநில அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
TN Job “FB Group” Join Now
அந்த கூட்டத்தில் மாநிலத்தின் பிரச்சனைகள், மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இன்று மாலை மருத்துவ வல்லுனர்களுடன் தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்னர் தளர்வுகள் குறித்த விவரங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.