தமிழகத்தில் அனைத்து காவலர்களுக்கும் ரூ.5000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

2
தமிழகத்தில் அனைத்து காவலர்களுக்கும் ரூ.5000 ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து காவலர்களுக்கும் ரூ.5000 ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து காவலர்களுக்கும் ரூ.5000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்த இரவு பகல் பாராமல் பணிபுரிந்து வரும் காவலர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

ஊக்கத்தொகை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்ற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தனியார் வாகனங்கள் இ-பதிவு மூலமாக மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்நிலையில் அதனை கண்காணிக்கவும், ஆபத்தான சூழ்நிலையில் மக்களுக்கு உதவி செய்யவும் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல லட்சம் போலீசார் இந்த பணிகளை சுழற்சி அடிப்படையில் இரவு பகல் பாராமல் செய்து வருகின்றனர். மேலும் பல காவல்துறை அலுவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிமுதல் கடைகளை திறக்க அனுமதி – 7 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள்!

இதுவரை 1,686 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 60 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு மக்கள் உயிரை காக்க போராடும் காவலர்களுக்கு தமிழக அரசு ரூ.5000 உதவித்தொகை வழங்க உள்ளதாக அரசாணையை முதல்வர் வெளியிட்டுள்ளார். முதலில் தமிழக காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் கட்ட காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 1,17,184 காவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. காவல்துறைக்கு உதவியாக பணிபுரியும் ஊர்க்காவல்படையினருக்கும் இதே நிலைமைதான் .எங்களுக்கும் சுழற்சிமுறை பணிதான் எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. எங்களுடன் பணியாற்றுபவர்களும் ெகாரானாவினால் இறந்துள்ளனர். எங்களுக்கும் சலுைகைகள் வழங்க மாண்புமிகு முதல்வரை தமிழ்நாடு ஊர்க்காவல்படையின் சார்பாக பணிவுடன் கேட்டுகொள்கிேறேன். மதிப்பிற்குறியபத்திரிக்ைகை ஆசிரியர்கள் இதை முதல்வர் பார்வைக்கு காெண்டு செல்ல ேகட்டுகெ nள்கிறேன்

  2. தந்தை வழியில் மகன்-முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்.
    காவல்துறையில் பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்களை நியமித்தார். வேலை நியமனத் தடைச் சட்டத்தை நீக்கி,மூன்று லட்சம் பேருக்கும் மேலாக அரசு வேலை வழங்கினார் நம் தலைவர் கலைஞர்.
    சக மனிதனின் உடலும் உள்ளமும் வாழ்க்கை முறையும் நலமாக வேண்டுமென பணியாற்றும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!