குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்வதற்காக வரும் 12 ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தண்ணீர் திறப்பு
தமிழக விவசாயிகளின் நீர்ப்பாசனம் மற்றும் சாகுபடிக்காக பெரிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் டெல்டா பகுதிகளின் நீர்பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12 ஆம் தேதி முதல் நீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
முன்னதாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்துள்ள மழையால் மேட்டூர் அணை உள்ளிட்ட பல பெரிய அணைகள் நிரம்பியுள்ளது. அந்த வகையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.13 அடியாக அதிகரித்துள்ளது. இந்த நீரை விவசாயிகளின் பாசனத்துக்காக பயன்படுத்தும்படிக்கு திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் பல்நோக்கு மருத்துவமனை முதல் மதுரை நூலகம் வரை – முதல்வரின் அறிவிப்புகள்!
அதன் படி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டால், காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் நலிவடைந்துள்ள விவசாய நிலங்களுக்கு உதவியாக இந்த நீர் திறப்பு பயன்படும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.