12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – மாநில முதல்வர் அறிவிப்பு!!
ஒடிசாவில் கொரோனா பரவல் காரணமாக 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று பரவலால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த வருடம் முதல் இந்த வைரஸ் பரவுகிறது. முதலில் மாணவர்களின் நலன் கருதி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுகள் தேர்வின்றி தேர்ச்சியை அறிவித்துள்ளன. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்த பள்ளிகள் திறக்கப்பட்டது. மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியதால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. எனினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அவசியமாக உள்ளது. அவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு 12ம் வகுப்பு மதிப்பெண் முக்கியமானதாக உள்ளது.
ஜூன் 2வது வாரத்தில் பேருந்து சேவை தொடக்கம்? மாநகராட்சி திட்டம்!
ஆனால் வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் ஒடிசா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீடு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வை விட மாணவர்களின் வாழ்க்கை மிகவும் முக்கியம் அதனால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.