தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேதி அறிவிக்காமல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் உயர்கல்வி வகுப்பு பள்ளிகள் தொடங்கப்பட்டது. ஆனால் பள்ளி திறந்த நாட்கள் முதல் மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் காணப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து மாணாக்கர்களின் நலன் கருதி தமிழக அரசு மீண்டும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறாது என்றும் மாணாக்கர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பிளஸ் 2 வகுப்பிற்கு மட்டும் மே 5ம் தேதி முதல் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடைபெரும் என்று அறிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை வேகமெடுக்கத் தொடங்கியது. எனவே மாணாக்கர்களின் நலன் கருதி தேதி அறிவிக்காமல் பிளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
ஞாயிற்று கிழமையில் கோயம்பேடு சந்தை இயங்கும் – நிர்வாக குழு அனுமதி!!
பிளஸ் 2 மாணாக்கர்களுக்கு தற்போது வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும், ரத்து செய்யப்படாது என்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாணாக்கர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ அதனை விட உடல் நலமும் முக்கியம் என்று கூறினார்.
Fast ahh exam vachi mudinga plz sir