புதுச்சேரி, காரைக்காலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – முதல்வர் அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. அரசு முன்னெச்சரிக்கையாக முதலில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்து பொதுத்தேர்வானது மே 5ம் தேதி நடை பெற இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தப்பட்டனர். ஆன்லைன் வாயிலாக அலகுத்தேவுகள், திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
சமீபத்தில் மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகளின்12 ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து பல மாநிலங்கள் பொதுதேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தமிழகத்திலும் பொதுத்தேர்வை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ரத்து செய்துள்ளார். இந்த தொற்று பரவல் காலத்தில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது. எனவே மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பயணச்சீட்டு இன்றி 27 லட்சம் பேர் பயணம் – மத்திய ரயில்வே நிர்வாகம்!!
இதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி முதல்வர் இதை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுத்தேர்வு நடக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். பரவி வரும் கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளததால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. மதிப்பெண்கள் முறை பற்றி கலந்தாலோசித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் புதுச்சேரி முதல்வர் தெரிவித்துள்ளார்.