தமிழக அரசின் 7 இலக்குகள் – முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு புதிய 7 இலக்குகளை அறிவித்துள்ளது. இந்த 7 இலக்குகளை மாவட்ட ஆட்சியர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் தங்களது மாவட்டங்கள் எட்டிட ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, கொரோனா பரவலை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது குறித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மருத்துவ படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கொரோனா நிதியாக தங்க சங்கிலி வழங்கிய பெண்ணிற்கு அரசு வேலை – நியமன ஆணை வழங்கல்!
மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். இதை தொடர்ந்து கல்வியில், வேலை வாய்ப்பில், சமூக பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் உங்கள் அதிகாரம் மற்றும் பதவியை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக மாவட்டங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் எட்ட வேண்டிய இலக்குகள் குறித்தும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இவை அனைத்தும் அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக மாவட்டங்கள் எட்ட மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக, தரமானதாக இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் 7 இலக்குகள்:
- வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு
- மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி
- குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்
- அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்
- எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்
- உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்
- அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்