தமிழகத்தில் மாணவர்களுக்கு உயர்கல்வியில் தரம் – ஆக.30ல் முதல்வர் ஆலோசனை!
தமிழக அரசு பள்ளிக்கல்விதுறையை தொடர்ந்து உயர்கல்வி துறையிலும் தொடர் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவிகள் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் உதவித்தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர்கல்வி தரம் குறித்து முதல்வர் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு புதிய கல்வி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் கடந்த ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளி சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இத்தகைய கல்வி திட்டங்கள் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வியை தொடர்ந்து உயர்கல்விதுறையிலும் அரசு புதிய மாற்றங்களை புகுத்தி வருகிறது.
மேலும் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வண்ணம் அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரி சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பெண்கள் உயர்கல்வி பெற முடியும் , இடைநிற்றல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ள மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – விரைவில் DA உயர்வு!
இந்த நிலையில் உயர்கல்வியின் தரத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆகஸ்ட் 30ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துதல், ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்திற்கேற்ப மாணவர்களை தயார் படுத்துதல் தொடர்பாகவும் ஆலோசிக்க பட உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்