அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வரின் அதிரடி உத்தரவு!

0
அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு - முதல்வரின் அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு - முதல்வரின் அதிரடி உத்தரவு!
அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வரின் அதிரடி உத்தரவு!

தொழிலாளர் தினம் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அந்த நாளன்று தொழிலாளர்களின் நலன் கருதி அந்தந்த மாநில அரசுகள் புதிய நலத்திட்டங்களை அமல்படுத்தும். அந்த வகையில் நடப்பு ஆண்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சத்தீஸ்கர் அரசு, அம்மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி (DA) உயர்வு:

உலகம் முழுவதும் சர்வதேச தொழிலாளர் தினம் “மே 1″அன்று கொண்டாடப்படுகிறது. நடப்பு வருடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. அந்த நாள் தொழில்கள் மற்றும் துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினத்தின் நோக்கம் தொழிலாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவது மட்டுமல்ல, அவர்களின் உரிமைகளைப் புரிந்து கொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் ஆகும். மேலும் பல நாடுகளில், தொழிலாளர் தினம் என்பது ஒரு தேசிய விடுமுறையாகும், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் முன்னேற்றத்திற்கான சிறப்பு பிரச்சாரங்களை ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் முடிந்த சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி, சத்தீஸ்கர் அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை ஐந்து சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் இது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல்வர் பூபேஷ் பாகேல் ட்வீட் செய்துள்ளார். அதில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு படி, மாநில அரசு ஊழியர்களின் 17 % ஆக இருந்த அகவிலைப்படி 22 % ஆக உயர்ந்து உள்ளது. மேலும் “ஷ்ராமிக் சீயான் (முதியோர்) சஹாயதா யோஜனா'” திட்டத்தின் கீழ் முதியோர் தொழிலாளர்களுக்கு ஒரு முறை ரூ.10,000 உதவி வழங்குவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை இன்று அறிவிப்பு!

இதனை தொடர்ந்து இ-ரிக்ஷாக்களை வாங்க விரும்பும் பெண்களுக்கு 50,000 ரூபாயில் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதையடுத்து “நோனி சசக்திகரன் யோஜனா’ வில் 18 வயதாக இருந்த உச்ச வயது வரம்பை மூன்று ஆண்டுகள் அதிகரித்து, இந்தத் திட்டத்தின் பலன் 21 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து “மிதன் யோஜனா” என்ற திட்டத்தை மே 1 அன்று தொடங்கியுள்ளார். மேலும் இந்த திட்டம் முதன் முதலில் கிராமப்புறங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் மே தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!