தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் துவக்கம்? முதல்வர் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் வருகிற 21ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
பேருந்து சேவை:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் வெகுவாக குறைந்து வரும் காரணத்தால் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து ஒரு சில தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து வருகிறார். அதன்படி கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே அதிக அளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 21 ஆம் தேதி முதல் முடிவுக்கு வரவுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட 40% பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக புதிய தளர்வாக வருகிற 21ம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து சேவை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலுமான மாவட்ட ஆட்சியர்கள் பேருந்து சேவைக்கு அனுமதி அளித்தால் தமிழகத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் மக்கள் முறையாக நடவடிக்கைகளை கடைபிடித்தால் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.