பிரெஞ்ச் அரசின் ‘செவாலியர் விருது’ பெற்ற கர்நாடக பாடகி அருணா சாய்ராம் – குவியும் வாழ்த்துக்கள்!
பிரெஞ்சு அரசு சார்பில் உலகில் உள்ள சிறந்த மனிதர்களை கௌரவிக்கும் விதத்தில் ‘செவாலியர் விருது’ வழங்கப்படுகிறது. இந்த விருதானது அந்த நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் நிலையில், இந்த ஆண்டு கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம் அவர்களுக்கு விருதானது வழங்கப்பட இருக்கிறது.
செவாலியர் விருது:
பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருது ஆண்டுதோறும் உலகில் உள்ள சிறந்த மனிதர்களை தேர்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்த விருதானது கர்நாடக இசைப் பாடகி, இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம் அவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பாடல் திறமைக்காக மட்டுமல்லாமல் இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக பிரான்ஸ் அரசின் கலாசார மந்திரி ரீமா அப்துல் மலாக் தெரிவித்ததாக சென்னையில் உள்ள பிரான்ஸ் தூதர் லிஸ் டால்போட் பாரே தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், இந்த விருது பிரெஞ்சு மற்றும் சர்வதேச கலை உலகிற்கு அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்புகளுக்கு எங்கள் நாட்டின் பாராட்டுக்கான அடையாளம் என தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் இவர் கர்நாடக இசையின் அற்புதமான அழகையும், நுணுக்கத்தையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பரப்பி இருப்பதாக அவர் பாராட்டி இருக்கிறார். மேலும் அவர் இசை மூலமாக கர்நாடக இசை உலகில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என பாராட்டி பேசி இருக்கிறார்.
நாளுக்கு நாள் மோசமாகும் கோபியின் நிலைமை.. மல்லுகட்டி சண்டை போடும் ராதிகா – “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்த விருது குறித்து அருணா சாய்ராம் கூறுகையில், ஒரு இசைக்கலைஞராகவும், நமது நாட்டின் கலாச்சார வாரிசாகவும் எனது கடமையை செய்ததற்காக இதுபோன்ற ஒரு உயரிய விருதை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், நான் செய்து வரும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான கூடுதல் பொறுப்பையும் இது வழங்குகிறது. எனது பணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த விருது எனக்கு உதவும் என பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.