IPL 2022: தோனி கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடுவதே எனது கனவு – சேத்தன் சகாரியா பேட்டி!
ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸால் வெளியிடப்பட்ட சேத்தன் சகாரியா, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனியின் கீழ் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு சகாரியா ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேத்தன் சகாரியா பேட்டி:
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக துபாயில் நடைபெற்ற 14 வது சீஸனும் சிறப்பாக முடிவடைந்தது. இத்தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது . இதை தொடர்ந்து IPL தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – வலுக்கும் போராட்டம்! தலைநகர் முற்றுகை!
இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. BCCI அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுத்துள்ளது. இதை தொடர்ந்து இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜாஸ் பட்லர் (10 கோடி), யாஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 கோடி) ஆகியோரை மட்டுமே தக்கவைத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரில் ஒருவரை தக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் – அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!
இந்நிலையில் இந்த ஆண்டு IPL மெகா ஏலம் குறித்து ராஜஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சகாரியா பேட்டியளித்துள்ளார். அதில் “கடந்த ஏலம் எனது வாழ்க்கையை மாற்றியது. மேலும் இந்த ஆண்டு எம்.எஸ். தோனியின் கீழ் விளையாட வேண்டும் என்பது எனது கனவு. அவர் பல பந்துவீச்சாளர்களின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார். மேலும் அவரது கேப்டன்ஷிப்பை பார்த்து, எனது ஆட்டத்தை வேறு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறினார். இதனை தொடர்ந்து தோனி கீழ் விளையாடு பல பந்துவீச்சாளர்கள் கனவு என்றும் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்கு கீழ் விளையாட விரும்புகிறேன் எனவும் தெரிவித்தார்.