தமிழக பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் செஸ் விளையாட்டு? தலைமை செயலாளர் விளக்கம்!

0
தமிழக பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் செஸ் விளையாட்டு? தலைமை செயலாளர் விளக்கம்!
தமிழக பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் செஸ் விளையாட்டு? தலைமை செயலாளர் விளக்கம்!தமிழக பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் செஸ் விளையாட்டு? தலைமை செயலாளர் விளக்கம்!
தமிழக பள்ளிகளில் கட்டாயமாக்கப்படும் செஸ் விளையாட்டு? தலைமை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமான நடந்து முடிந்துள்ள நிலையில், நிறைவு விழாவில் பேசிய தலைமை செயலாளர் இறையன்பு ஆர்மீனியா நாட்டை போல தமிழக பள்ளிகளிலும் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்

செஸ் விளையாட்டு:

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த போட்டியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும் 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் அந்த விழாவில் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டுகளில் வெற்றி தோல்வி என இரண்டும் இருக்கும். ஆனால் நிகழ்ச்சி குறித்த கொண்டாட்டங்களில் இருவரும் இருப்பார்கள். அதனால் அனைவரும் வெற்றியாளர்களாக நினைத்து கொண்டாட்டத்தை அனுபவிப்பார்கள். இன்றைய இளைஞர்கள் சமூக ஊடங்கங்கள் மற்றும் பல்வேறு மின்னணு பொருள்களால் திசை திருப்பப்படுகிறார்கள்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் தட்டுப்பாடு? மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு

அவர்களை அதில் இருந்து மீட்க செஸ் விளையாட்டு பெரிதும் உதவி செய்கிறது. ஆர்மீனியா நாட்டில் உள்ள பள்ளிகளில் செஸ் விளையாட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது போல ஒரு நாள் தமிழக பள்ளிகளிலும் செஸ் போட்டியானது கட்டாயமாக்கப்படும். செஸ் விளையாட்டில் பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என கூறுகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த குறுகிய கால அவகாசமே இருந்தது. ஆனால் அதற்குள் சிறப்பான முறையில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது இதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையும் ஆய்வுகளும் வழிகாட்டுதல்களும் தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!