அக்.1 முதல் பழைய காசோலை புத்தகம் செல்லாது? முக்கிய வங்கியின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் சமீபத்தில் இணைந்துள்ள ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் தற்போது நடைமுறையில் உள்ள பழைய காசோலை புத்தகம் இனி செல்லாது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கி நிர்வாகம்:
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் குறிப்பிட்ட தனித்தனியான காசோலை புத்தகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட வங்கியின் பங்கு முதலீடுகள் குறையும் போதும், வங்கியின் பொருளாதார சிக்கல் காரணமாகவும் ஒரு வங்கி மற்றொரு பெரிய வங்கியின் நிர்வாகத்தின் கீழ் மாற்றம் அடைகிறது. இப்படி மாறும் போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியின் பழைய பெயரிலேயே அனைத்து பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படும்.
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? மாநில முதல்வர் விளக்கம்!
அதேபோல், கடந்த 2020ஆம் ஆண்டு ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) இணைக்கப்பட்டது. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய இரண்டு வங்கிகளின் பழைய காசோலை புத்தகத்தையே வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வங்கியின் அதிகாரபூர்வ டிவீட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஃபோர்டு நிறுவன ஆலைகளை மூட முடிவு – பலர் வேலை இழக்கும் அபாயம்!
புதிய அறிவிப்பின் படி ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்களை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பயன்படுத்தக் கூடாது என்றும் அவை செல்லாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட ஐஎஃப்எஸ்சி, எம்ஐசிஆர் தகவல்களுடன் கூடிய பிஎன்பி காசோலை புத்தகத்தை மட்டுமே வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், புதிய காசோலை புத்தகத்தை நேரடி வங்கி கிளைகளிலோ அல்லது ஏடிஎம், இணைய வங்கி வசதியின் மூலமாகவோ அழைப்பு மையத்தை தொடர்பு கொண்டோ பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.