தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு நிலவும் வானிலை நிலவரம் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
இன்று(மே 30) முதல் வருகிற 01.06.2021 வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 02.062021 மற்றும் 03.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
TN Job “FB Group” Join Now
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியாச உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயது குறைப்பு?தலைமை செயலாளரிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காடு 4 செமீ, வால்பாறை, சிவலோகம் தலா 2 செமீ, பென்னாகரம், சங்கராபுரம் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. 30.05.2021 மற்றும் 31.05.2021 அன்று குமரிக்கடல் மற்றும் இலங்கையில் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 30.05.2021 மற்றும் 31.05.2021 அன்று கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 30.05.2021 மற்றும் 03.06.2021 அன்று தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூராவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Bakkiyaraj se