தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தமிழகத்தில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வானிலை நிலவரம் பற்றிய முழு தகவலையும் சென்னை வானிலை மையம் அறிக்கையாக வெளியிட்டு உள்ளது.

வானிலை நிலவரம்:

தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி வீசுவதால் இன்று (ஏப்ரல் 2) முதல் வருகிற 04.04.2021 வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். மேலும் வருகிற 05.04.2021 அன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.

தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் – மாநில செயலாளர் வலியுறுத்தல்!!

இதன் காரணமாக சில இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள், வேட்பாளர்கள், காவல்துறையினர் வெளியில் இருந்து பணிகள் செய்வதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

TN Job “FB  Group” Join Now

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 03.04.2021 முதல் 06.04.2021 வரை தமிழகத்தில் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும்.

ஏப்ரல் 3, 5ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

அதிகபட்ச வெப்பநிலையாக 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் காமாட்சிபுரம் 3 செ.மீ, சங்கரிதுர்க் மற்றும் மதுரை வடக்கு தலா 2 செ.மீ , தல்லாகுளம், மதுரை தெற்கு, திண்டுக்கல், போடிநாயக்கனூர் மற்றும் ஆண்டிபட்டி தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக 02.04.2021 மற்றும் 03.04.2021 அன்று அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல் பணிக்கான 3ம் கட்ட பயிற்சி வகுப்புகள் – தேதி அறிவிப்பு!!

மேலும் 02.04.2021 முதல் 04.04.2021 வரை குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். அதேபோல் 02.04.2021 மட்டும் 03.04.2021 அன்று தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். எனவே இந்த பகுதிக்கு செல்லும் பொழுது மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!