சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி – நிலுவை தேர்வுகளை எழுத வாய்ப்பு!
சென்னை பல்கலை தொலைநிலை கல்வியில் 1980-81 ல் சேர்ந்த மாணவர்கள் டிசம்பர் 2022 நிலுவைத் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் குறித்த விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நிலுவை தேர்வு:
தமிழகத்தில் தற்போது தொலைதூர கல்வியில் பட்டப்படிப்புகளை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைக்கு ஏராளமானோர் பட்டப்படிப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொலை நிலைக் கல்வியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நாளை (பிப்.01) 2022 ல் நடைபெற்ற சென்னை பல்லைகழக தொலைநிலை கல்வியின் இளநிலை, முதுநிலை மற்றும் MBA தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதனை தேர்வர்கள் http://www.ideunom.ac.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் சென்னை பல்கலைக்கழகம் 1980 – 1981 ம் கல்வியாண்டில் தொலைநிலை கல்வியில் பயின்றவர்கள் நிலுவையில் உள்ள தேர்வுகளை எழுத மறுவாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது.
இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது தொலைநிலைக் கல்வி திட்ட இணையதளத்தில் நிலுவைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தேர்வு குறித்த அனைத்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.