சென்னை: இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் ஷாக்!
கொரோனா காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். தங்கத்துக்கு டிமாண்ட் அதிகரித்துக் கொண்டே போவதால் தங்கம் விலை மேலும் உயரும் என நிபுணர்கள் கூறினர். இந்நிலையில் இன்றும் தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதிரடி உயர்வு:
உக்ரைன் மீது ரஷ்யாவின் தீவிரமடைந்து உள்ளதால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை கண்டுள்ளது. இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதுவும் தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தான் ஏராளமான நகைப்பிரியர்கள் உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாகும். மேலும் நடுத்தர மக்களின் அவசர தேவைகளுக்கு முதல் தேர்வாக தங்க நகைகள் உள்ளன. மேலும் நடப்பு ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கத்தின் விலை அதிக அளவில் உயர்ந்து இருந்தது.
தனியார் நிறுவனமான WIPRO-ல் நல்ல ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கவும்..!
வருடம் தோறும் அட்சய திருதியை முன்னிட்டு தங்க நகை விலை உயரும். இருப்பினும் நடப்பு வருடம் நகை பிரியர்களுக்கு ஜாக்பாட் அளிக்கும் வகையில் தங்க விலை சரிந்தது. அதனால் அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி குவித்தனர். இந்நிலையில், இன்று தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ. 4,787-க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.38,296-க்கு விற்பனையாகிறது. அடுத்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.