சென்னையில் விரைவில் ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்கம் – வெளியான சூப்பர் தகவல்!
தமிழகத்தின் மெட்ரோ நகரமான சென்னையில் தற்போது 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த ரயில்கள் சென்னையில் இயக்கப்படும் என்று மெட்ரோ இயக்குனர் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
ஆளில்லா மெட்ரோ ரயில்:
நாட்டில் சில முக்கிய நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தான் மெட்ரோ ரயிலை 2ம் கட்ட முக்கிய நகரங்களில் செயல்படுத்துவதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. தமிழகத்தில், அவற்றில் மதுரை நகரும் தேர்வாகி, இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போல நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் இயக்கத்தில் அடுத்த கட்ட புரட்சியாக ஆளில்லா மெட்ரோ ரயில்கள் கடந்த 2020 டிசம்பர் மாதம் நாட்டில் முதன் முறையாக தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அதிவேகத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்கள் பயணிகளின் பயண காலத்தை குறைப்பதுடன், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாகவும் இருந்து வருகிறது.
தமிழகத்தில் நாளை (அக்.07) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது – தயாராக இருங்க மக்களே!
Exams Daily Mobile App Download
அதிலும், ஆளில்லா மெட்ரோ ரயில் திட்டம் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக உள்ளது. தற்போது இந்த ஆளில்லா மெட்ரோ ரயில்கள் சென்னையின் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் செயல்படுத்தப்படுவதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இவை சிக்னல் மூலம் இயங்கும் என்றும் சென்னை மெட்ரோ இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்