சென்னை தியாகராய செட்டி கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை தியாகராய செட்டி கல்லூரியில் காலியாக உள்ள உதவியாளர், பதிவு எழுத்தர், பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | சென்னை தியாகராய செட்டி கல்லூரி |
பணியின் பெயர் | உதவியாளர், பதிவு எழுத்தர், பாதுகாவலர் |
பணியிடங்கள் | 11 |
கடைசி தேதி | 30.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சென்னை தியாகராய செட்டி கல்லூரி காலிப்பணியிடங்கள்:
பாதுகாப்பு அலுவலர், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிக்கு மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்லூரி கல்வி தகுதி:
08 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்களை இந்த அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் பதிவு அஞ்சல் அல்லது துரிதஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Secretary,
Sir Theagaraya College,
No: 1047 T.H Road,
Old Washermenpet,
Chennai-600021