சென்னை: உச்சத்தை தொடும் ஆபரண தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க விலை:
இந்தியாவில் பல ஆண்டுகளாக, தங்கம் என்பது செல்வத்தின் அடையாளமாகவும், உலகின் பல பகுதிகளில் பண்டமாற்று நாணயமாகவும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நகைகளாகவும் பிரபலமாகி வருகிறது. மேலும் மக்கள் நாளுக்கு நாள் தங்கத்தில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். ஒரு நாட்டில் தங்கத்தின் மதிப்பை வைத்து தான் பணம் அச்சிடப்படுகிறது. இதன் மூலம் நாட்டின் செல்வத்தை தங்கத்தை கொண்டு அளவிட முடியும் என்று கூறப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் தென் ஆப்ரிக்காவில் தான் வெட்டி எடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் பள்ளி மாணவ & மாணவிகளின் தற்கொலைகள் – அச்சத்தில் பெற்றோர்கள்!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம், ஊரடங்கு போன்றவைகளால் நாட்டின் வருமானம் மிகவும் பின்தங்கி காணப்பட்டது. மேலும் பணவீக்கம் விலைவாசி உயர்வு ஆகியவற்றாலும் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உக்ரைன் போர் உலக நாடுகள் முழுவதும் எதிர்பார்க்காத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒன்றிய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதை தொடர்ந்து தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியது. அதாவது இந்த ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1000 அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
Exams Daily Mobile App Download
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56 உயர்ந்து, ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து, ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தொடர்ந்து வெள்ளியின் விலை கிராமுக்கு 80 காசு குறைந்து ரூ.60.00-க்கும், ஒரு கிலோ 60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை அதிகரிப்பு இல்லத்தரசிகள் மற்றும் நகைப்பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.