சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சம் தொட்டு வரும் இந்த சூழலில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு:
உக்ரைன்- ரஷ்யா போருக்கு பின், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. மேலும் கடந்த ஜூன் மாத மத்தியில் தங்கத்தின் விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த அடுத்த நாட்களில் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 13 ரூபாயும், சவரனுக்கு 104 ரூபாயும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,676க்கும், சவரன் ரூ.37,408க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13 உயர்ந்து, ரூ 4,689 ஆகவும், சவரனுக்கு ரூ.104 ஏற்றம் கண்டு ரூ.37,512க்கும் விற்கப்படுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் வரவிற்கும் புதிய மாற்றங்கள் – அரசின் முடிவு!
தங்கத்தின் விலை தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்து வருகிறது. கடந்த 6,7 தேதிகளில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.1064 குறைந்தது. சவரன் ரூ.38 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை திடீரென ரூ 37 ஆயிரத்துக்கு குறைந்தது. ஆனால், கடந்த இரு நாட்களாக மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கினாலும், இன்னும் சவரன் ரூ.38 ஆயிரத்தை எட்டவில்லை. மேலும் வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசு அதிகரித்து ரூ.62.80க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.300 அதிகரித்து, ரூ.62. 800 காசுக்கு விற்கப்படுகிறது. மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் வெள்ளி விலை ரூ.400 அதிகரித்துள்ளது.