சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
தமிழகத்தில் தொடந்து அதிகரித்து வந்த ஆபரண தங்கத்தின் விலையானது மீண்டும் அதிரடியாக குறைந்து சரிவை கண்டுள்ளது. ஆபரண தங்கத்தின் இந்த விலை சரிவானது நகைப்பிரியர்களிடையே மிகுத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தங்கத்தின் விலை:
நாடு முழுவதும் கடந்த சில வருடங்களாக வரலாறு காணாத வகையில் அதிக மதிப்பை பெற்று விலை அதிகரித்து வரும் பொருட்களின் வரிசையில் தங்கமும் ஒன்றாகும். இவ்வாறு தங்கத்தின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் மக்கள் அனைவரும் அதனை அதிகம் பயன்படுத்துவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது ஆகும். தங்கத்தின் தரம் அதிகரிப்பதால் பெரும்பாலானோர் தங்கத்தில் செலுத்தும் முதலீட்டை பாதுகாப்பானதாக கருதி செலுத்தி வருகின்றனர். அதனால் அண்மை காலமாக தங்க விலை தாறுமாறான ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.
Vijay TV Bigg Boss 5 Promo | 7 வாக்குகளுடன் தேர்தலில் வெற்றி பெறும் இமான் அண்ணாச்சி!
அவ்வாறு தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் மக்களுக்கு ஆபரண தங்கத்தின் மீதான ஈடுபாடு துளியும் குறையவில்லை என்பதே உண்மை. சிலர் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்து வருவதால் விலை குறையும் என்ற எண்ணத்தில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் குறையத் தொடங்கிய தங்கத்தின் விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் தொடங்கியது முதல் மீண்டும் தங்கம் விலை அதிரடி சரிவை கண்டு வருகிறது.
தமிழக கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி போடவில்லை என்றால் அனுமதி இல்லை! அமைச்சர் தகவல்!
அந்த வகையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. அதனை தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.4,513க்கும், 1 சவரன் ரூ.36,104க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 24 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.4,877க்கும், 1 சவரன் ரூ.39,016க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.80 க்கும், 1 கிலோ வெள்ளி 64,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.