சென்னை: ஒரே நாளில் குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!’
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்த நிலையில் தற்போது ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 வரைக்கும் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
கடந்த சில நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. தங்கத்தின் விலை எவ்வளவு அதிகரித்தாலும் நகை பிரியர்கள் மற்றும் தாய்மார்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். மேலும், அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பெரும் பகுதியை நகையில் தான் முதலீடு செய்கின்றனர். இந்த கொரோனா காலகட்டத்திற்கு பிறகு தான் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40,000 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
Exams Daily Mobile App Download
தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்ய போராலும் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால் அவ்வப்போது தங்கத்தின் விலை உயர்வதும், குறைவதுமாய் இருக்கிறது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதேபோல சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 66.30 ரூபாய்க்கு விற்பனையானது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வருடாந்திர வைப்புத் திட்டம்! முழு விவரம் இதோ!
தற்போது ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,120 -க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.4,765க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இன்றி ரூ.66.30-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.