IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கோப்பையை வெல்ல தோனியின் புது வியூகம்!
ஐபிஎல் தொடர் என்றதும் பலரும் மிகவும் ஆர்வமாக தயாராகி விடுகின்றனர். தற்போது 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நடக்க உள்ள நிலையில் தோனி எடுத்துள்ள புது முடிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஐபிஎல் தொடர் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில் முன்னதாக இந்தியாவிலேயே ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட்டது. அப்போது அதிக வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மற்ற போட்டிகள் அனைத்தும் துபாயில் திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்பு முன்னதாக வெளியானது.
தமிழகத்தில் நாளை (பிப்.23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி, ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்க உள்ளது. போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கான ஏலம் கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூரில் நடந்தது. ஏலத்தில் சிஎஸ்கே அணி 25 வீரர்களை மொத்தம் 87 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி 5 வது முறையாக வெற்றிக் கோப்பையை பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள்!
இதற்கு அனைத்து வீரர்களுக்கும் 2 வாரங்களுக்கு முன்பிருந்தே பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதனால் மார்ச் முதல் வாரத்தில் அனைத்து வீரர்களும் குஜராத்தின் சூரத் நகருக்கு வர அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு, மார்ச் 8ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை அங்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில், அதன் மூலம் வீரர்களின் தனித்திறமையை அறிந்து அதன் படி போட்டிகளில் வியக்கங்களை எடுக்க தோனி முடிவு செய்துள்ளார்.