சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – தீபக் சாஹரை மாற்றுவது குறித்து மனம் திறந்த CEO காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் 2022 போட்டியில் இன்னும் ஒரு தடுமாற்றத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியில் தீபக் சாஹரை மாற்றுவது குறித்து அணி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2022 ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனுக்கு மத்தியில், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி பெரிய அடியை சந்தித்து வருகிறது. கடந்த 6 ஆட்டங்களில் 5ல் தோல்வியை தழுவி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனால் CSK லீக் கட்டத்தை தாண்டுமா என்பதே சந்தேகமாகி இருக்கிறது. இதனுடன் CSK அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இந்த சீசனுக்கான எஞ்சிய போட்டிகளில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் அறிவிப்பு – IPL தொடரில் இருந்து விலகிய தீபக் சஹார்!
ஏற்கனவே, தொடை தசை காயம் காரணமாக பெங்களூரு தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த தீபக் சாஹருக்கு மீண்டும் காயம் ஏற்படவே அவர் இந்த சீசனில் இருந்து முழுமையாக விலகி இருக்கிறார். இந்த ஆண்டுக்கான IPL 2022 சீசனில் சுமார் 14 கோடிக்கு எடுக்கப்பட்ட தீபக் சாஹரின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் ஒரு பின்னடைவாக மாறி இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் 2022 இல் அவர்கள் இன்னும் ஒரு திருப்புமுனைக்கான வாய்ப்பைக் கொண்டிருப்பதால், சாஹருக்கு மாற்றாக சிஎஸ்கே அணி மாற்று வீரரை தேடுமா என்பது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் மனம் திறந்துள்ளார்.
அதாவது, CSK ஒரு மாற்று வீரரை நாடக்கூடும். ஆனால் புதிய பந்தில் சாஹரைப் போன்ற திறமையைக் கொண்ட ஒரு பந்து வீச்சாளரைத் தாங்கள் கண்டுபிடிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காசி விஸ்வநாதன் கூறும் போது, ‘நாங்கள் அதை அணி நிர்வாகத்திடம் விட்டுவிட்டோம். அவர்கள் இதுவரை எங்களிடம் திரும்பி வரவில்லை. தீபக் போல திறமையான ஒரு இந்திய பந்து வீச்சாளரை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார். உண்மையில் சாஹர் CSK அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – குஜராத்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடருமா அணி?
ஆனால் அவரை பற்றிக்கொள்ள அணி மிகவும் தவறவிட்டது. புதிய பந்தின் மூலம் CSK அணிக்கு ஆரம்ப முன்னேற்றங்களைக் கொடுக்கும் திறன் கொண்ட தீபக் கடந்த மூன்று சீசன்களில் பவர்பிளேயில் மட்டும் 7.69 என்ற எகானமி ரேட்டில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பிப்ரவரியில் நடந்த மெகா ஏலத்தில் அவரை ஒரு பெரிய தொகைக்கு வாங்கிய CSK அணிக்காக அவர் ஐந்து ஆட்டங்களைத் தவறவிட்டாலும் அவரது விக்கெட் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே உள்ளது. இப்போது இந்த சீசனில் அவர் இல்லாத நேரத்தில், பவர்பிளேயில் ஓவருக்கு 8.30 ரன்களில் CSK அணி ஐந்து ஆட்டங்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.